மொகாதிஷு : ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் தீவிரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய 2 விமானத் தாக்குதல்களில் 37 பேர் உயிரிழந்தனர்.சோமாலியாவில் இருந்து செயல்படும் அல் ஷபாப் தீவிரவாத இயக்கம் ஐஎஸ் இயக்கத்தின் துணை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைநகர் மொகாதிஷூ மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அல் ஷபாப் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து அமெரிக்க விமானப்படை விமானங்கள் அடுத்தடுத்து 2 தாக்குதல்கள் நடத்தின.முதல் தாக்குதல் ஆளில்லாத ட்ரோன் விமானங்களால் அல் ஷபாப் முகாமை இலக்காக கொண்டு நடத்தப்பட்டது.