சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை: கோவை அரசு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் 3 பேரை பெட்ரோல் ஊற்றி எரித்து படுகொலை செய்ததாக அதி முகவை சேர்ந்த நெடுஞ்செழியன், ரவீந்திரன் (எ) மது, முனியப்பன் ஆகிய மூவருக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. மாணவிகள் மூன்று பேரை உயிரோடு தீ வைத்து எரித்த அதிமுகவைச் சேர்ந்த 3 கொடியவர்களையும் விடுதலை செய்ய ஆளுநர் ஆணை பிறப்பித்து விட்டதாக வந்துள்ள செய்தி, அதிர்ச்சி அளிக்கின்றது.இது, கண்டனத்திற்குரியது.