நாகை: நாகை மாவட்டம் வேட்டைகாரனிருப்பு கோயில்பத்து என்ற இடத்தில் 243 ஏக்கரில் ரூ.450 கோடி செலவில் 1.50 லட்சம் டன் நெல், அரிசி உள்ளிட்ட பொருட்களை இருப்பு வைக்கும் அளவில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகம் 23 சேமிப்பு கிடங்குகளை கட்டியது. இந்த இடத்தை கடற்படை தங்களுக்கு வேண்டும் என்று கோரியதால் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு சுமார் ஓர் ஆண்டாக திறப்பு விழா காணாமல் பூட்டியே வைக்கப்பட்டிருந்தது.