காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. ேநற்று முன்தினம் நள்ளிரவு காகி சாபேத் மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 4 மணி நேரம் நீடித்த இந்த தாக்குதலில் 30 போலீசார் கொல்லப்பட்டனர்.