விடுதியில் தண்ணீர் வராததால் தகராறு எம்எல்ஏ கனகராஜ் ஆவேசம்

சென்னை : சூலூர் தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவர் கனகராஜ். இவர் அடிக்கடி பரபரப்பாகவும், சர்ச்சையாகவும் பேசி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு விரைவில் டிடிவி தினகரன் அணி, அதிமுகவுடன் இணையும் என தெரிவித்தார். இந்த பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இவர் எம்எல்ஏ விடுதியில், பி-பிளாக்கில் (3பி) தங்கியிருக்கிறார். இந்நிலையில் நேற்று தனது அறையில் இருக்கும் பாத்ரூமிற்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த குழாயில் தண்ணீர் வரவில்லை. இதனால் அவர் கோபமடைந்தார். பிறகு சம்மந்தப்பட்ட பிரச்னையை சரிசெய்வதற்காக ஆட்களை அனுப்பும்படி கூறியிருக்கிறார்.

அதையடுத்து எம்எல்ஏவின் அறைக்கு பிளம்பர், லிப்ட் மேன், மெட்ரோ வாட்டார் ஏஇ ஆகியோர் வந்துள்ளனர். அவர்களை பார்த்ததும், ‘தண்ணீர் வராமல் எப்படி உள்ளே செல்வது’ எனக்கூறி தகராறு செய்துள்ளார். பிறகு அவர்கள் பிரச்னையை சரிசெய்வதற்காக உள்ளே சென்றபோது, அவர்களை கனகராஜ் பூட்டி வைத்துவிட்டார். அப்போது எம்எல்ஏ சுயநினைவில் இல்லை என கூறப்படுகிறது. மேலும் ெதாடர்ந்து அங்குள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.  இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரவை செயலாளர், எம்எல்ஏவை சமாதனம் செய்து, பூட்டப்பட்டிருந்தவர்களை வெளியில் மீட்டுக்கொண்டுவந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: