ஓசூர்: ஓசூர் - பானசவாடி இடையேயான ஓசூர் டீசல் தொடர் வண்டிகள் ரத்து நீக்கப்பட்டுள்ளது. ஓசூரில் இருந்து பெங்களூருக்கு பணி நிமித்தமாக பலர் தினசரி சென்று வருகின்றனர், பெங்களூருவில் வசிப்பதற்கு கூடுதல் செலவு செய்யும் சூழ்நிலை உருவாகும் காரணத்தால், ஓசூரில் வசித்து வருகிறார்கள். தகவல் தொழிநுட்பம், மின்னணு நிறுவனம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வேலை செய்யும் ஊழியர்கள் ஓசூரில் இருந்து பெங்களூர் பயணிக்க ரயிலை பெரிதும் நம்பி இருக்கிறார்கள். ரயில்வே அமைச்சர் கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி பெங்களூர் வந்த போது, பானசவாடி ரயில் நிலையத்தை பார்வையிட்டார், மேலும் புதிதாக புறநகர் ரயில் சேவைகள் இயங்கும் அன்று அறிவிப்பு வெளியிட்டார், அதன் அடிப்படையில் மார்ச் 12-ம் தேதி முதல் பானசவாடி - ஓசூர் - பானசவாடி இடையே 2 ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டது.