தருமபுரி: தருமபுரியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை செய்ய மருத்துவக்குழு தயாராக உள்ள நிலையில் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மெத்தனமாக செயல்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும், காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.