சென்னையில் 6 பேரிடம் செல்போன் பறிப்பு: செல்போன் திருடர்களுக்கு போலீஸ் வலை

சென்னை: சென்னையில் 6 பேரை தாக்கி இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் செல்போனை பறித்துச் சென்றனர். சென்னை கே.கே.நகரில் கத்தியால் குத்தி ஞானவேல் என்பவரிடம் செல்பறித்து சென்றுள்ளனர். மேலும் கோயம்பேட்டில் சேதுபாண்டி, முத்துக்குமார், சக்கரபாணியிடம் செல்போன் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. வளசரவாக்கத்தில் ரகுபதி என்பவரிடமும், வடபழனியில் கவிதா என்பவரிடமும் வழிப்பறி நடந்துள்ளது. சிசிடிவி காட்சிகளை வைத்து செல்போன் திருடர்களை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: