சென்னை: பாஜ பிரமுகர் அளித்த புகாரின் அடிப்படையில் ‘இந்து மதத்தை புண்படுத்தி பேசியதாக’ கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி.லாசரஸ் மீது ஆவடி போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சென்னை சூளை, கோவிந்தாச்சார்யா தெருவை சேர்ந்தவர் பாலாஜி. திருவள்ளூர் மாவட்ட பாஜ எஸ்சி பிரிவு தலைவர். கடந்த மாதம் 25ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாலாஜி ஒரு புகார் மனு அளித்தார். அதில் பாலாஜி கூறியிருப்பதாவது:கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் என்பவர் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் ஆவடி, கவரப்பாளையத்தில் உள்ள சர்ச்சில் மதபோதனை செய்து உள்ளார். அப்போது அவர் இந்துக்கள் மனம் புண்படும்படியும், வழிபாட்டுமுறையை தவறாக பேசி இழிவுப்படுத்தி உள்ளார்.