கொழும்பு: இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, தன்னை பதவி ஏற்குமாறு கூறியதாக ரணில் விகரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. சஜித் பிரேமதாச தகவல் தெரிவித்துள்ளார். மேலும் கொள்கை அடிப்படையில் சிறிசேனாவின் வேண்டுகோளை நிராகரித்ததாகவும், ரணில் விக்ரமசிங்கேவிற்கு பயந்து நிராகரிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.