சென்னை: வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. இதன் காரணமாக, தென் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து, கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகரில் விட்டுவிட்டு பரவலாக மழை பெய்துள்ளது. மேலும் மழை தொடரும். தெற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு தென் கிழக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. அது மேலும் வலுவடைந்து வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோரப் பகுதிக்கு வரும். இதையடுத்து, நாளை முதல் 8ம் தேதி வரை தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில், வட கிழக்கு பருவமழை பெய்யும். பின்னர் அது படிப்படியாக வலுப்பெறும். இந்த நாட்களில் தென் மாவட்டங்கள் மட்டுமின்றி, வட மாவட்டங்களில் சென்னை தவிர மற்ற நகரத்தில் மழை வலுக்கும்.