மதுரை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிபிஐ இணை இயக்குநர் பிரவீன் சின்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டும் காவல்துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யாததையடுத்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.