சான் பிரான்சிஸ்கோ: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து உலகம் முழுவதும் கூகுள் நிறுவன ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் நேற்று வெளிநடப்பு செய்தனர்.
கூகுள் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்களும், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கடந்த வாரம் செய்தி வெளியிட்டது. ஆன்ட்ராய்டு சாப்ட்வேரை உருவாக்கிய ஆண்ட்டி ரூபின் மீதும் பல பெண் ஊழியர்கள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். இவை நம்பகமானவை என முடிவு செய்த கூகுள் நிறுவனம், கடந்த 2014ம் ஆண்டில் அவருக்கு வழங்க வேண்டிய 90 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை துண்டிக்காமல் வழங்கியது. இதேபோல், கூகுள் நிறுவனத்தின் எக்ஸ் லேப் டைக்ரன் ‘டிவால்’ மீதும் பாலியல் குற்றச்சாட்டு சில ஆண்டுகளுக்கு முன் சுமத்தப்பட்டது. ஆனால், அதற்கு பின்பும் அவர் டைரக்டராக நீடித்தார். தற்போது மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் கடந்த செவ்வாய்க்கிழமை அவர் தனது பதவியை ராஜினமா செய்தார். அவரது பரிசுத் தொகையும் நிறுத்தப்படவில்லை.