சென்னை: தமிழக அரசியலில் எடுபடாத மனிதர் டிடிவி.தினகரன். அவர் தன்னை நம்பிய 18 எம்எல்ஏக்களுக்கு திருநெல்வேலி அல்வா கொடுத்துவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 111வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையையொட்டி சென்னை, நந்தனம் சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். காங்கிரஸ் சார்பில் எச்.வசந்தகுமார் எம்எல்ஏ, கராத்தே தியாகராஜன், பாஜ சார்பில் இல.கணேசன், தமாகா சார்பில் ஞானதேசிகன், பாமக ஏ.கே.மூர்த்தி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் விரைவில் நடைபெற இருக்கின்ற 20 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெறுவோம். டிடிவி.தினகரன் 18 எம்.எல்.ஏ.விற்கு திருநெல்வேலி அல்வா கொடுத்துவிட்டார்.