அமெரிக்கா: மத்திய அமெரிக்க நாடான எல் சல்வாடரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சுச்சியாக் ஆற்றை மனித சங்கிலி அமைத்து கடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ஏழ்மை மற்றும் வன்முறையால் எல்சல்வாடா நாட்டு மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மற்ற நாடுகளுக்கு அவர்கள் இடம் பெயர்வது அண்மைக் காலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் இருந்து வடஅமெரிக்க நாடான மெக்ஸிகோவிற்கு ஏராளமானோர் அகதிகளாக படையெடுத்து வருகின்றனர்.