திருத்தணி : திருத்தணியில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் 3 பேர் உயிரிழந்தனர். முருக்கம்பட்டு என்ற இடத்தில் நடந்த விபத்தில் பாஸ்கர் அஜித்குமார, கதிர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.