சென்னை : சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே சிக்கராயபுரத்தில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சிக்கராயபுரத்தில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடையை மூடக்கோரி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.