ஆத்தூர்: ஆத்தூர் அருகே தென்னங்குடி பாளையத்தில் இருசக்கரவாகனம் மீது மினிலாரி மோதியதில் முத்துராஜ், அத்தியப்பன் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மினிலாரியில் பயணித்த 10 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.