கழுவும் நீரில் நழுவும் மீனை போல பேசுகிறார்: ரஜினி குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று அளித்த பேட்டி: சபரிமலை விவகாரத்தில் நடிகர் ரஜினியின் கருத்து அவரின் தெளிவின்மையை தான் காட்டுகிறது. எந்த கருத்தாக இருந்தாலும் ஆணித்தரமாக சொல்ல வேண்டும். அப்படிப்பட்டவரை தான் தலைவனாக ஏற்க  முடியும். கழுவுகிற நீரில் நழுவுகிற மீனைப்போல இருக்க கூடாது.  யார் என்ன மாதிரி கருத்தை தெரிவிக்கிறார், யார் நழுவுகிறார் என்பது மக்களுக்கு தெரியும். அப்படிப்பட்டவர்களை நழுவ விட வேண்டும் என்பதும் தெரியும்.

மத விஷயங்களில் கட்சிகள் தலையிடாமல் இருப்பது நல்லது. அதிமுகவில் பூத் கமிட்டி போட்டுள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜெயலலிதா அரசின் சாதனைகளை எடுத்து சொல்லி பிரசாரம் செய்து கொண்டிருக்கிறோம். 2019 நாடாளுமன்ற தேர்தலில்  40 தொகுதிகளையும் கைப்பற்றுவதுதான் எங்கள் இலக்கு. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: