சென்னை: சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று அளித்த பேட்டி: சபரிமலை விவகாரத்தில் நடிகர் ரஜினியின் கருத்து அவரின் தெளிவின்மையை தான் காட்டுகிறது. எந்த கருத்தாக இருந்தாலும் ஆணித்தரமாக சொல்ல வேண்டும். அப்படிப்பட்டவரை தான் தலைவனாக ஏற்க முடியும். கழுவுகிற நீரில் நழுவுகிற மீனைப்போல இருக்க கூடாது. யார் என்ன மாதிரி கருத்தை தெரிவிக்கிறார், யார் நழுவுகிறார் என்பது மக்களுக்கு தெரியும். அப்படிப்பட்டவர்களை நழுவ விட வேண்டும் என்பதும் தெரியும்.