சென்னையில் வருகிற 25ம் தேதி திமுக செயலாளர்கள், நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது

சென்னை: சென்னையில் வருகிற 25ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில்  நடக்கிறது. நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக திமுக தயாராகி வருகிறது. இதன் முதல்கட்டமாக தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதி என மொத்தம் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிக்கும் தொகுதி வாரியாக திமுக பொறுப்பாளர்கள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டனர். ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பேர் வீதம் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் உடனடியாக தங்களுடைய பணியை தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 25ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் வருகிற 25ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில்” நடைபெறும். இதில் மாவட்ட  செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: