சென்னை: இடைத்தேர்தல் நடத்த ஆளுங்கட்சிக்கு தைரியமில்லை. எனவே, நாடாளுமன்ற தேர்தலோடு, தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மகளிர் அணி செயலாளர்கள், மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு பிரேமலதா அளித்த பேட்டி: ஒவ்வொரு துறையிலும் பெண்கள் முன்னேறி உள்ளனர். மீ டூ என்ற ஹேஷ் டேக் வேகமாக பரவி வருகிறது. இதை ஒவ்வொரு பெண்ணும் தனக்கு பயனுள்ளதாக மாற்றி கொள்ள வேண்டும். இதை சர்ச்சைக்கு ஆளாக்குவதோ? அல்லது விவாத பொருளாக்குவதோ? இல்லாமல் அதை தங்களுக்கு பயனுள்ளதாக ஆக்க வேண்டும். பெண்களை சகோதரிகளாக, நண்பர்களாக பாருங்கள். பெண்கள் ஸ்டிராங்காக இருந்தால் யாரும் பெண்களிடம் வால் ஆட்ட முடியாது. முதலில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு தமிழகத்தில் வழியில்லை. இடைத்தேர்தலை நடத்துவதற்கு ஆளுங்கட்சிக்கு தைரியமில்லை.