சென்னை: சென்னை அடுத்த படப்பையில் மருந்து கடையில் போதை மாத்திரைகள் கேட்டு கல்லூரி மாணவர்கள் 2 பேர் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படப்பையில் உள்ள மருந்து கடைக்கு சென்ற கல்லூரி மாணவர்கள் போதை மாத்திரை கேட்டு வற்புறுத்தியுள்ளனர். கடையின் உரிமையாளர் சரவணன், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தர முடியாது என்று கூறியுள்ளார். இதனால் ஆவேசமடைந்த மாணவர்கள் மருந்துகடை மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.