கேரளா: பாலியல் வழக்கில் சிறையில் உள்ள பிஷப் பிராங்கோ ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பிராங்கோவை ஜாமினில் விடுவிக்க கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிஷப்பாக பணியாற்றி வந்த பிராங்கோ மீது கேரள கன்னியாஸ்திரி ஒருவர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.