சென்னை : பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் இந்தியில் ஊர்ப் பெயர்கள் எழுதப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த, அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.