சென்னை: வண்டலூர் - பூந்தமல்லி புறவழிச்சாலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி நடந்த சாலை விபத்தில், மோகன் (54) என்பவர் பலியானார். இந்த வழக்கில் இழப்பீடு கோரி 3 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்றும், இந்த 3 வழக்குகளுக்கும் பதிலளிக்க எங்களுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, என்றும் இழப்பீடு தரும் சோழமண்டலம் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் அளித்த உத்தவு வருமாறு:சென்னை சிறு வழக்குகள் நீதிமன்றங்களுக்கான பதிவாளரிடம் தம்பி என்ற வக்கீல் கடந்த 2017 ஜூன் 7ம் தேதி ஒரு புகார் கொடுத்தார். அதில், வாகன விபத்து வழக்குகள் தொடர்பாக 55 வழக்கு கட்டுகள் மாயமாகி விட்டதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தீர்ப்பாய பதிவாளரும், உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். எனவே, இந்த வழக்குகளை சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. உயர் நீதிமன்ற போலீசார் 56 வழக்குகள் தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். போலி எப்ஐஆர், போலி இழப்பீடு கோரப்பட்டது குறித்து உயர் நீதிமன்ற ஓய்வு பெற் நீதிபதி கே.சந்துரு தலைமையிலான நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.