திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இடது முன்னணி சார்பில், முன்னாள் இஸ்ேரா விஞ்ஞானி நம்பி நாராயணனை போட்டியிட வைக்க முயற்சி கொள்ளப்பட்டு வருகிறது. திருவனந்தபுரத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் விஞ்ஞானியாக இருந்து ஓய்வு பெற்றவர் நம்பி நாராயணன். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இவர், இஸ்ரோவில் பணிபுரிந்து வந்தபோது வெளிநாட்டுக்கு விண்வெளி ஆய்வு ரகசியத்தை கடத்தியதாக கூறப்பட்ட வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டார். பல மாத சிறைவாசத்திற்கு பின்னர் நம்பி நாராயணன் விடுவிக்கப்பட்டார்.இந்த நிலையில் விண்வெளி ஆய்வு ரகசிய கடத்தலுக்கும், நம்பி நாராயணனுக்கும் எந்த தொடர்பு இல்லை என்று நீதிமன்றம் கூறியது. இதையடுத்து நம்பி நாராயணன், தன்னை வழக்கில் சிக்க வைத்த போலீசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரியும், நஷ்டஈடு கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் நம்பி நாராயணனுக்கு ₹50 லட்சம் நஷ்டஈடு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் பொய் வழக்கு ெதாடர்ந்தது தொடர்பாக ஒரு விசாரணை குழு அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
