சென்னை: அறநிலைய துறை கூடுதல் ஆணையர் திருமகள் வீட்டில் சிலைகடத்தல் தடுப்புபிரிவினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். பெரம்பூரில் உள்ள திருமகளின் வீட்டில் சிலைகடத்தல் தடுப்புபிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டில் வைத்து திருமகளிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.