எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி புழல் சிறை கைதி விடுதலை: மயிலாப்பூரை சேர்ந்தவர்

சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிறைவை ஒட்டி தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்க, கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து, புழல் சிறை உள்ளிட்ட பல்வேறு தமிழக சிறைச்சாலைகளில் 10 ஆண்டுகளை முடித்த தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், புழல் சிறையில் தண்டனை பிரிவில் இருந்த சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சரவணன் (48) என்பவர் நேற்று காலை 10 மணிக்கு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படடார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி புழல் சிறையில் இதுவரை 202 பேர் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: