வெளிநாட்டில் இருந்து வந்தவரிடம் அமெரிக்க, யூரோ டாலர்கள் திருட்டு

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி, அமெரிக்காவில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் விடுமுறைக்காக சென்னை வந்த அவர் நேற்றுமுன்தினம் சொந்த வேலைக் காரணமாக  தனது நண்பரின் கார் மூலம் முகப்பேர், தி.நகர், பகுதிகளுக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கினார். அதன்பின்னர் இரவு 7 மணியளவில் வடபழனி 100 அடிசாலையில் காரை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு  பின்பகுதியில் வைத்திருந்த டிராவல் பேக்கை எடுக்க சென்றுள்ளார். அப்போது காரின் பின்பகுதியில் வைத்திருந்த பேக் காணவில்லை. இது குறித்து வடபழனி காவல் நிலையத்தில் பொன்னுச்சாமி புகார் அளித்தார்.

அதில் 5 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பு 3,60,000 ஆயிரம்), 100 யூரோ (இந்திய மதிப்பு ₹8 ஆயிரம்) மற்றும் மூன்று வங்கிகளின் பாஸ்புக் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் காணவில்லை.அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: