சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி, அமெரிக்காவில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் விடுமுறைக்காக சென்னை வந்த அவர் நேற்றுமுன்தினம் சொந்த வேலைக் காரணமாக தனது நண்பரின் கார் மூலம் முகப்பேர், தி.நகர், பகுதிகளுக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கினார். அதன்பின்னர் இரவு 7 மணியளவில் வடபழனி 100 அடிசாலையில் காரை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு பின்பகுதியில் வைத்திருந்த டிராவல் பேக்கை எடுக்க சென்றுள்ளார். அப்போது காரின் பின்பகுதியில் வைத்திருந்த பேக் காணவில்லை. இது குறித்து வடபழனி காவல் நிலையத்தில் பொன்னுச்சாமி புகார் அளித்தார்.