சென்னை: சென்னை அண்ணாநகர் 3வது அவென்யூவை சேர்ந்தவர் ரபிஅகமது இவர் தனியார் நிறுவனத்தில் வேலை ெசய்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்றுமுன்தினம் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அவர் தன்னுடைய காரை வீட்டின் முன்பு நிறுத்தி வீட்டு தூங்கச் சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலையில் வந்து காரை பார்த்தபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது, இதையடுத்து ரபிஅகமது காரினுள் பார்க்கும் போது தான் வைத்திருந்த 2 செல்போன்கள், ₹15ஆயிரம் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ரபிஅகமது இச்சம்பவம் குறித்து அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இதேபோல், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை படிப்பு பயின்றுவருபவர் துவாரகநாத். இவர் விடுதியில் இரவு படித்துவிட்டு லேப்டாப் மற்றும் செல்போனை அப்படியே வைத்து விட்டு தூங்கியுள்ளார். மறுநாள் காலை காணவில்லை. இது குறித்து ஏழுகிணறு காவல்நிலையத்தில் புகார்அளித்தார்.