வாலிபால்: கர்நாடகா சாம்பியன்

சென்னை: அகில இந்திய பிஎஸ்என்எல் வாலிபால் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தமிழக அணியை வீழ்த்தி கர்நாடகா அணி தொடர்ந்து 12வது ஆண்டாக சாம்பியன் கோப்பை வென்றது.தமிழ்நாடு தொலைத் தொடர்பு மாநிலத்தின்  விளையாட்டு மற்றும் பண்பாட்டு மையத்தின் சார்பில் 18வது அகில  இந்திய பிஎஸ்என்எல் வாலிபால் போட்டி செப்.18ம் தேதி   சென்னையில் தொடங்கியது. இதில்,  இமாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, அசாம் ஆகியவை ஏ பிரிவிலும், தமிழ்நாடு, ராஜஸ்தான், உத்தரகாண்ட்,  பீகார் ஆகியவை பி பிரிவிலும்  என 8 அணிகள் பங்கேற்றன.இதில் தமிழ்நாடு, கர்நாடகா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. எழும்பூர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று நடந்த விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், கர்நாடகா அணி  25-16, 25-18, 25-10 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழகத்தை வீழத்தி தொடர்ந்து 12வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இமாச்சல் பிரதேச அணி 25-14, 25-19, 25-20 என்ற செட்களில் உத்தரகாண்ட்டை வீழ்த்தி 3ம் இடத்தை பெற்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: