பணத்தகராறில் கள்ளக்காதலியை கொலை செய்த வாலிபர் கைது

பெங்களூரு: பெங்களூரு கே.ஆர்புரம் சரகத்திற்குட்பட்ட தேவசந்திராவை அடுத்த ஐயப்பாநகர் மஞ்சுநாத் லே அவுட் முதலாவது கிராஸ் முதலாவது தெருவை சேர்ந்தவர் லட்சுமி (30). திருமணமான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவர் தற்போது லட்சுமியுடன் இல்லை என்று கூறப்படுகிறது. சில ஆண்டாக தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கே.ஆர்புரத்தை சேர்ந்த கோவிந்தா (24) என்ற வாலிபருடன், லட்சுமிக்கு தொடர்பு ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி கோவிந்தா, லட்சுமியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து வந்தார். மேலும் தான் சம்பாதிக்கும் பணத்தில் பாதியை கோவிந்தா, லட்சுமியின் குடும்ப செலவிற்கு கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கோவிந்தா, லட்சுமியை சந்திப்பதை குறைத்து வந்தார். எப்பொழுதெல்லாம் கோவிந்தா லட்சுமியை பார்க்க வருவாரோ அப்போதெல்லாம், அவரிடம் குடும்ப செலவிற்கு பணம் கேட்டு லட்சுமி தொந்தரவு கொடுத்து வந்தார். கடந்த செப்.10ம் தேதி இரவு லட்சுமியை  கோவிந்தா சந்திப்பதற்கு வந்தார்.

அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. லட்சுமி, கோவிந்தாவிடம், குடும்ப செலவிற்கு சரியாக பணம் கொடுப்பது இல்லை என்று கூறி, தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த கோவிந்தா, லட்சுமியை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் அவரைகீழே தள்ளி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் சடலத்தை வீட்டிலேயே போட்டுவிட்டு, தப்பியோடிவிட்டார். செப்.14ம் தேதி காலை வீட்டின் உரிமையாளர் லட்சுமியி–்ன் வீடு பூட்டப்பட்டு கிடந்ததை பார்த்து, சந்தேகத்தில் கதவை திறந்து பார்த்தபோது, உள்ளே அவர் சடலமாக கிடந்தார். உடனே  கே.ஆர்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

லட்சுமி கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்த போலீசார், இந்த கொலைக்கு கோவிந்தா தான் காரணம் என்பதை அறிந்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று கோவிந்தாவை கைது செய்தனர். விசாரணையில் கள்ளக்காதலியாக இருந்தாலும், அடிக்கடி குடும்ப செலவிற்கு பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வந்தார். இதனால் செய்வது அறியாது லட்சுமியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: