தர்மபுரி: தர்மபுரி டவுன் டெல்லி நகரை சேர்ந்தவர் மணிவண்ணன். டிராவல்ஸ் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கடந்த மூன்றரை வருடங்களாக பிரம்ம கமலம் செடி வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டில் பிரம்ம கமலம் செடியிலிருந்து ஒரே நேரத்தில் 9 பூக்கள் பூத்தன. இதை அக்கம்பக்கத்தினர் ஆர்வமுடன் வந்து பார்த்து சென்றனர். இதுபற்றி மணிவண்ணன் கூறுகையில், கடந்த மூன்றரை வருடத்திற்கு முன்பு பிரம்மகமலம் செடியின் இலையை எங்கள் வீட்டில் உள்ள ஒரு தொட்டியில் நட்டு வைத்தோம்.
