மன்னார்குடி: திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும். தேர்தலின் ேபாது நாங்கள் நடுநிலை வகிப்போம் என மன்னார்குடியில் திவாகரன் கூறினார். அண்ணா திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் திவாகரன் மன்னார்குடியில் நேற்று அளித்த பேட்டி:
தினகரன் தன்னிடம் குவிந்து கிடக்கும் பணத்தை வைத்து தமிழக முதல்வர் ஆகிவிடலாம் என கனவு காண்கிறார். அது ஒரு போதும் பலிக்காது. தீமைகள் நிறைந்த தினகரன் அரசியல் களத்தை விட்டே அகற்றப்பட வேண்டிய நபர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளத்தான் கவலை படுகிறார். தமிழக நலனை காப்பதற்கு கவனம் செலுத்த மறுக்கிறார். தமிழக மக்களுக்காக கருணாநிதி செய்துள்ள தியாகங்களை நாங்கள் மதிக்கிறோம்.