சென்னை: அதிமுக செயற்குழு கூட்டம் அவசரமாக வருகிற 20ம் தேதி கூடுகிறது. கூட்டத்தில், அதிமுக உறுப்பினர்கள் குறைந்துள்ளது குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுக செயற்குழு கூட்டம் வருகிற 20ம் தேதி திங்கட்கிழமை 4 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில், அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும். அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து அதிமுக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.