புதுடெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஆதரவு அளித்து பாஜ தலைவர் அமித்ஷா கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்து இருந்தார். இதையடுத்து சட்ட ஆணையம் கடந்த மாதம் நாட்டில் அங்கீகாரம் பெற்ற அனைத்து தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளின் கருத்தை கேட்க கூட்டம் நடத்தியது. பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சமீபத்தில் சட்ட ஆணையத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குழு சென்றது. அவர்கள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கருத்தை பதிவு செய்தனர்.
இந்தநிலையில் பாஜ தேசிய தலைவர் அமித்ஷா, 8 பக்கம் கொண்ட கடிதத்தை சட்ட ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.