புதுடெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் ரூ.3500 கோடிக்கும், ஐஎன்எக்ஸ் மீடியா ஒப்பந்தம் ரூ.305 கோடிக்கும் மேற்கொள்ளப்பட்டது. இந்த அன்னிய முதலீடுக்கு அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு பிரதிபலனாக கார்த்தி சிதம்பரத்தின் ஆலோசனை நிறுவனத்துக்கு குறிப்பிட்ட தொகை செலுத்தப்பட்டுள்ளது. இந்த முறைகேடு குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு ஆகியவை விசாரித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரி வினீத் விநாயக் விசாரித்து வருகிறார்.