திருச்சி: காதலிக்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று பேஸ்புக் நண்பர் மிரட்டியதால் இன்ஜினியரிங் கல்லூரி மாணவி தீக்குளித்தார். இதையடுத்து வாலிபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்சி மேலகல்கண்டார்கோட்டையை சேர்ந்தவர் சுமதி (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். அரியமங்கலம் பர்மா காலனியை சேர்ந்த வினோத்குமார் மகன் விஷால் (19). இருவரும் பேஸ்புக்கில் நண்பர்களாகினர். சுமதி மீது விஷாலுக்கு காதல் ஏற்பட்டது. அதை சுமதியிடம் விஷால் வெளிப்படுத்தினார். ஆனால் காதலை ஏற்க மறுத்துவிட்டார். எனினும், காதலை ஏற்குமாறு விஷால் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.