ஒப்பாரும் மிக்காரும் இல்லாத முதுபெரும் தலைவர் - கலைஞர் கருணாநிதி. அவரது இழப்பு ஈடு செய்யவியலா பேரிழப்பு. அவரது நினைவிடத்தில் நித்தமும் குழுமி அஞ்சலி செய்துவரும் பெரும் மக்கள் திரள் அவர் மீதான அன்பையும் மரியாதையையும் பறைசாற்றுகிறது. கலைஞரின் ஆட்சி, நிர்வாகத் திறன், தேசிய அளவில் வியூகங்கள் வகுக்கும் மதிநுட்பம், மக்கள் நலனுக்கான தொலைநோக்கு திட்டங்கள் எல்லாம் அவரை தமிழகத்துக்கான தலைவர் என்பதோடு நிறுத்திவிடவில்லை. அகில இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர் அவர்.