பல துறைகளில் தனித்துவமிக்க வல்லமை படைத்தவர் பன்முக ஆற்றல் கொண்ட கலைஞர்

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத முதுபெரும் தலைவர் - கலைஞர் கருணாநிதி. அவரது இழப்பு ஈடு செய்யவியலா பேரிழப்பு. அவரது நினைவிடத்தில் நித்தமும் குழுமி அஞ்சலி செய்துவரும் பெரும் மக்கள் திரள் அவர் மீதான அன்பையும் மரியாதையையும் பறைசாற்றுகிறது. கலைஞரின் ஆட்சி, நிர்வாகத் திறன், தேசிய அளவில் வியூகங்கள் வகுக்கும் மதிநுட்பம், மக்கள் நலனுக்கான தொலைநோக்கு திட்டங்கள் எல்லாம் அவரை தமிழகத்துக்கான தலைவர் என்பதோடு நிறுத்திவிடவில்லை. அகில இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர் அவர்.

அதனால் தான் நாடே திரண்டு அவருக்கு  இதயபூர்வ அஞ்சலி செலுத்துகிறது. திராவிட முன்னேற்ற கழகம் என்கிற மாபெரும் இயக்கத்தின் தலைவர் என்பது மட்டும் அவரது அடையாளம் அல்ல. இலக்கியம், நாடகம், திரைப்படம் என பல்துறைகளில் தனித்துவமிக்க தடம் பதித்தவர். தொட்ட துறையை எல்லாம் மிளிர வைத்தவர். கலைஞரின் இந்த பன்முக ஆற்றல், வல்லமை குறித்து துறை சார் ஆளுமைகள் இங்கு அலசுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: