சொந்த ஊரை கைவிட்டவரு… இவரு!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அதிமுக வேட்பாளர் அய்யப்பன். இவர் திருமங்கலம் தொகுதியின் செக்கானூரணியில் குடியிருந்து வருகிறார். வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் ஆதரவில் உசிலம்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளராக தேர்வானார். இவர் பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம், ‘‘இவர் யாருப்பா? எந்த ஊரு? இதுவரை பார்த்ததே இல்லையே?’’ என தொகுதி மக்கள் அதிமுகவினரிடம் கேட்க, ‘‘செக்கானூரணிக்காரர்’’ எனக் கூறியுள்ளனர். ‘‘இவர் நம்ம தொகுதிக்கு சொந்தமானவரு இல்லையேப்பா?’’ என அய்யப்பன் காதுபடவே பேசியுள்ளனர். இதற்கு பதில் சொல்ல முடியாத அய்யப்பன் திடீரென உசிலம்பட்டி – மதுரை சாலையில் தொகுதிக்குள் உள்ள கீழப்புதூரில் ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து, குடும்பத்தோடு குடி வந்து விட்டாராம். ‘‘நானும் உசிலம்பட்டிதாங்க’’ என்று பார்ப்போரிடம் எல்லாம் சொல்லி வருகிறாராம். ‘‘ஓட்டு வாங்குறதுக்காக சொந்த ஊரையே கைவிட்டவரு, தொகுதி மக்களை கைவிட்டுட மாட்டாரா?’’ என்கின்றனர் மக்கள்….

The post சொந்த ஊரை கைவிட்டவரு… இவரு! appeared first on Dinakaran.

Related Stories: