சென்னை : லாரிகள் ஸ்டிரைக் காரணமாக காய்கறிகள், முட்டைகள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று சென்னையில் அவர் அளித்த பேட்டி: அகில இந்திய அளவில் லாரிகள் வேலைநிறுத்தம் தொடர்ந்து 7வது நாட்களாக நீடிக்கிறது. முட்டைகள், காய்கறிகள், தொழிற்சாலை மூலப்பொருட்கள் நிறைய தேக்கம் ஏற்பட்டுள்ளது.தற்போது கூட்டம் குறைவான நேரங்களில் பேருந்துகளில் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. வேறு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது போராட்டம் தீவிரமாக உள்ளது. 515 புதிய பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டது.