குமாரபாளையத்தில் திமுக வேட்பாளர் வெங்கடாஜலத்தை ஆதரித்து கனிமொழி எம்பி பிரசாரம்

பள்ளிபாளையம் : குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வெங்கடாஜலத்தை ஆதரித்து, திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி, நேற்று கொக்கராயன்பேட்டை, காவேரி, பள்ளிபாளையம், ஒட்டமெத்தை, ஆவத்திபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட 7 இடங்களில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:தமிழக அரசு மக்களை ஏமாற்றப் பார்க்கிறது. பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ரேஷனில் வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக இல்லை. சந்துக்கடைகளில் தாராளமாக மது விற்பனை செய்யப்படுகிறது. சுத்திகரிப்பு நிலையம் இல்லாததால், ஜவுளித்தொழிலுக்கு அடிப்படையான சாயத்தொழில்கள் முடங்கி கிடக்கின்றன. பெண்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பே இல்லை. பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியவர்களை பாதுகாக்கும் முயற்சியில், எடப்பாடி அரசு ஈடுபட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் சாய சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு மானியக்கடன், விசைத்தறி தொழிலாளர்களுக்கு நெசவாளர் கூட்டுறவு சங்கம் அமைக்கப்படும். விசைத்தறிக்கு 1000 யூனிட் மின்சாரம் இலவசமாக்கப்படும். இவ்வாறு கனிமொழி எம்பி பேசினார்.நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி, பள்ளிபாளையம் ஒன்றிய பொறுப்பாளர் யுவராஜ், நகர செயலாளர் ரவிச்சந்திரன், செல்வம், ராதாகிருஷ்ணன், இளங்கோ, ரமேஷ், ஷெரிப், வேல்முருகன், பாலமுருகன், குளோப்ஜான், வினோத், செல்வராஜ், சங்கீதா செந்தில்குமார், ஜெயமணி முருகேசன், தனசேகரன், வெப்படை செல்வம், கார்த்திராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்….

The post குமாரபாளையத்தில் திமுக வேட்பாளர் வெங்கடாஜலத்தை ஆதரித்து கனிமொழி எம்பி பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: