சென்னை: மலோசியாவில் இருந்து இறக்குமதியான மணலை வாங்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மணல் இறக்குமதி செய்த நிறுவனத்துடன் நாளை மறுநாள் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. ராமையா என்டர்பிரைசஸ் நிறுவனம் மலோசியாவிலிருந்து மணல் இறக்குமதி செய்தது.