புதுடெல்லி : மேற்கு ஜப்பானில் ஒசாகா நகரில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை என மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். நிலநடுக்கம் குறித்து தூதரக அதிகாரிகளிடம் விசாரித்ததாகவும், இந்திய தூதரகம் சார்பில் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.