கடலூர்: கடலூரில் சுருக்குமடி வலைக்கு தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ள நிலையில் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி அமைச்சர் சம்பத்தை 4 கிராம மக்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் சிலர் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தது. எனவே, தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி வலைகளை கண்டிப்பாக மீனவர்கள் பயன்படுத்த கூடாது என ஆட்சியர் தண்டபாணி உத்தரவிட்டார். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். ஆட்சியரின் எச்சரிக்கையை தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியவில்ைல.