திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்த கனமழைக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடக்கிறது. கேரள மாநிலத்தில், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில், அங்கு கனமழை பெய்து வருகிறது. பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர், மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது.
சாலை, தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால், வீடுகளை விட்டு மக்கள் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால், ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்தன.