காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில்திமுக, பாமக உள்ளிட்ட 15 வேட்பாளர்கள் போட்டி

காஞ்சிபுரம் : நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் வேட்பு மனு பரிசீலனைக்குப் பிறகு திமுக, பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், பகுஜன் சமாஜ் பார்ட்டி மற்றும் சுயேட்சைகள் என 15  வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு மார்ச் 12ம் தேதி தொடங்கியது. இதில் வேட்புமனுத் தாக்கல் கடைசி நாளான நேற்று முன்தினம் வரை காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு 36 பேர் வேட்புமனுத்தாக்கல்  செய்திருந்தனர். வேட்பு மனு பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் முக்கிய கட்சிகளான திமுக சார்பில் போட்டியிடும் வக்கீல் எழிலரசன், பாமக சார்பில் போட்டியிடும் மகேஷ்குமார், மக்கள் நீதி மய்யம் எஸ்கேபி கோபிநாத், நாம் தமிழர்  சாமுவேல் சால்டின், பகுஜன் சமாஜ் பிரபாகரன், அமமுக சார்பில் மனோகரன் மற்றும் சுயேட்சைதள் மேகநாதன், ப.எழிலரசன், ஞாணமூர்த்தி, இளங்கோவன், ஜெயராஜ், வினோத்ராஜ், அருள்நாதன், மகேஷ், சீனிவாசன் என மொத்தம் 15  வேட்பாளர் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் களத்தில் உள்ளனர்….

The post காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில்திமுக, பாமக உள்ளிட்ட 15 வேட்பாளர்கள் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: