வீட்டிற்கு மின் இணைப்பு கொடுத்தபோது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

திருவள்ளூர்: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுக்கா கொடைக்கல் கிராமம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(35). இவர் திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு சீனிவாச நகரில் உள்ள முருகன் என்பவரது வீட்டிற்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக கம்பி இழுத்து மின்கம்பத்தில் கட்ட முயன்றுள்ளார். அப்போது, உயர் மின்னழுத்த கம்பியின் மீது பட்டு மின்சாரம் தாக்கி மயக்கம் அடைந்துள்ளார். அவரை கட்டிட உரிமையாளர் முருகன் உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று சேர்த்துள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கிருஷ்ண மூர்த்தியின் மனைவி சுஜிதா செவ்வாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post வீட்டிற்கு மின் இணைப்பு கொடுத்தபோது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி appeared first on Dinakaran.

Related Stories: