உடுமலை: உடுமலை பகுதியில் அமராவதி ஆறு, நல்லாறு உள்ளிட்ட நீர்நிலைகளில் மணல் கொள்ளை தொடர்ந்து நடக்கிறது. கான்டூர் கால்வாயில் நல்லாறு ஷட்டர் பகுதியில் இருந்து நல்லாறு செல்கிறது. இப்பகுதியில், ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. பல்வேறு கிராமங்களுக்கு குடிநீரும் வழங்கப்படுகிறது. இங்கு இரவு நேரங்களில் மணல் கொள்ளையர்கள் மணலை கொள்ளை அடித்து குவித்து வைத்துள்ளனர். பின்னர், வாகனங்கள் மூலம் வெளியிடங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.