மும்பை: காஷ்மீருக்கு சுற்றுலா சென்றபோது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மகாராஷ்டிரா எம்எல்ஏக்கள் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தாக்குதலில் உள்ளூர் மக்கள் 10 பேர் காயமடைந்தனர். மகாராஷ்டிரா சட்டப்பேரவை சார்பில் காஷ்மீருக்கு எம்எல்ஏக்கள் 7 நாட்கள் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சுதிர் பார்வே (பா.ஜனதா), சிவசேனாவை சேர்ந்த துக்காராம் கதே, கிஷோர் பாட்டீல், தேசியவாத காங்கிரசை சேர்ந்த தீபக் சவான், விக்ரம் காலே ஆகிய 5 எம்எல்ஏக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் சட்டப்பேரவை மூத்த அதிகாரிகள் 5 பேருடன் சென்றிருந்தனர்.